அநுராதபுர மாவட்டம் ஹொரவnபத்தான தேர்தல் தொகுதியில் நான்கு பக்கங்களும் மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகிய கிராமம் வீரச்சோலை ஆகும், அக்ராமத்தில் அமையப்பெற்ற வீரச்சோலை முஸ்லீம் மகா வித்தியாலயம் 1958.5.10 ஆம் திகதி அரசினால் அங்கீகரிக்கப்படாத பாடசாலையாக கிராம முன்னேற்ற சங்கத்தின் முயற்சியினால் வைக்கோல் கொட்டிலில் ஆரம்பிக்கப்பட்டது 1959.2.5ஆம் திகதி ஊர் தலைவர்களின் அயராத முயற்சியினால் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றவுடன் அன்றைய தினம் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் 30 பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டதுடன் முதல் அதிபராக எஸ்.ஏ.ஆர். சாஹிறும் முதல் ஆசிரியராக யூ.பி. தினபால ஆகியோர் நியமிக்கப்பட்டனர்
1993 மூன்றாம் ஆண்டு புலமை பரிசில் guPl;irapy; ஒரு மாணவன் சித்தி அடைந்தJடன் இப்பாடசாலையின் முன்னேற்றத்தின் முதல் கட்டமாக இது அமைந்ததுடன் இன்று வரை பல மாணவர்கள் சித்தி அடைந்து வளையத்தின் முன்னிலை பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகிறது..

1966.7.20ஆம் திகதி பாடசாலை அபிவிருத்தி சங்கம் ,அதிபர் ,ஆசிரியரின் ஒத்துழைப்புடன் பாடசாலைக்கான முதலாவது நிரந்தர கட்டிடம் 60 ழூ20 வேலை ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மாத்திரம் நடத்தப்பட்டது 1980. 6.26 ஆம் திகதி தரம் 06 ஆரம்பிக்கப்பட்டதுடன் பாடசாலை 08 வகுப்பை கொண்ட பாடசாலையாக மாற்றமடைந்தது.இரண்டாவது நிரந்தர கட்டடம் 80 ழூ 20 1991 டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்டது. 1993 ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் ஒரு மாணவன் சித்தி அடைந்தவுடன் இப்பாடசாலையின் முன்னேற்றத்தின் முதல் கட்டமாக இது அமைந்ததுடன் இன்று வரை பல மாணவர்கள் சித்தி அடைந்து வளையத்தின் முன்னிலை பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகிறது.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் தேசிய, மாகாண ,மட்ட தமிழ் தின, ஆங்கில சமூக விஞ்ஞான, தேசிய மீலாத்தின போட்டிகளில் கலந்து கொண்டதுடன் இன்றைவரைக்கும் பல சாதனைகளை ஈட்டி வருவதன் காரணமாக பாடசாலைக்கான மாணவர் தொகை அதிகரிக்க இப்பாடசாலைக்கான மூன்றாவது நிரந்தர கட்டிடம் 40 ழூ 20 சத்தார் ஹாஜியார் மூலம் கட்டி முடிக்கப்பட்டது.இந்நிலையில் 2009 தொடக்கம் தரம் 9 ஆரம்பிக்கப்பட்டதுடன் மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இப்பாடசாலையில் கல்வியின் முன்னேற்ற நிலை கண்டு மாணவர்களின் வருகை அதிகமாகியதால் இடப் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வது சிரமமாக காணப்பட்ட மையினால் மீண்டும் மனமுவந்து தெஹிவளை பாத்தியா மாவத்தையை சேர்ந்த அல்ஹாஜ் ஆர் .அப்துல் சத்தாரின் அன்பளிப்பால் 20 தர 20 வகுப்பறையில் கொண்ட இரண்டு வகுப்பறைகள் மக்களின் பங்களிப்படன் நிர்மாணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வகுப்பறை மேலும் 20ழூ20 ஆக தொடர்ந்து தற்போது 120 தர 20 வரை நீண்டு சென்றுள்ளதுடன் மாத்திரம் இன்றி கணினி, அச்சு இயந்திரம், தொலைக்காட்சி ,தையல் இயந்திரம் ,வழங்கியவுடன் இவரது பௌதீக வள பங்களிப்பு பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் மெருகூட்டியமையினால் இம்மக்களும் நன்றியுடனே இருக்கின்றனர். இவ்வாறு வளர்ச்சி அடைந்து இப் பாடசாலை தனது கல்விப் பயணத்தை மாற்றி இதிகாசத்தில் இடம்பிடிக்க முன்னோக்கி நகரத் துவங்கியது.
2011 ஆம் ஆண்டு பாடசாலை வரலாற்றில் முக்கியமான ஒரு கால் அட்டமாகும் அக்காலப் பகுதியில் அதிபராக கடமை ஆற்றிய என். எம்.ஏ. ரசூல் அவர்களின் தலைமையின் கீழ் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ,பள்ளி நிர்வாகம், பழைய மாணவர் சங்கம் ,ஏனைய சமூக அமைப்புகளின் அயராத முயற்சியினால் கா.பொ.த. சாதாரண தரம் பல சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. போதிய அளவு ஆசிரியர் வளப் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய 2013 ஆம் ஆண்டு வீரச்சோலை கல்வி அபிவிருத்தி சங்கம் உருவாக்கப்பட்டு அந்த சங்கத்தின் மூலமாக வெளி மாவட்டங்களில் உள்ள இளம்பட்டதாரி மாணவர்களின் உதவியுடன் கல்வியில் ஆர்வமிக்க பெற்றோர்களின் பங்களிப்புடனும்கா.பொ.த சாதாரண சரப் பரீட்சையில் வளர்ச்சி கண்ட எமது பாடசாலை 2019 ஆம் ஆண்டுகளில் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்தது அத்துடன் தன் வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளாமல் 2017 ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2019 உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபவர்களை பெற்று முதல் முறையாக இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழகம் அனுப்பியையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வளர்ச்சி அடைந்து வரும் பாடசாலைக்கு 2020ல் அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த 25வது அதிபராக எம்.ஐ. நதிர் ஹம்சா பதவியேற்றமை பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இவரின் வருகைக்குப் பின் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்ததோடு பௌதிக வளப்பற்றாக்குறையையும் பூர்த்தி செய்வதற்கான முயற்சில் ஈடுபட்டு வருகின்றார்.தற்போது 26 ஆசிரியர் ஆசிரியைகளுடன் 453 மாணவர்களுடனும் இரண்டு கல்வி சாரா ஊழியர்களுடன் கம்பீரமாக வீரனனடை போட்டுக் கொண்டிருக்கிறது. 2020இல் கா.பொ.த. சாதாரண தர பரீட்சை தமிழ் ,சிங்களம் ஆகிய இரு மொழி மூல பாடசாலைகளிலும் கோட்ட மட்டத்தில் 9ஏ பெற்ற ஒரு பாடசாலையாக திகழ்வதோடு வலையை மட்டத்தில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் 9 ஏ பெற்ற பாடசாலையாகவும் திகழ்வதற்கு தற்போதைய அதிபர் எம். ஐ. நதீர் ஹம்சா வழி வகுத்தமை வெர் மாணவர்களுக்கு சிறச்த கல்வியை வழங்குவதில் குறிக்கோளாக கொண்டுள்ளார் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.